தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள்! - மாபெரும் வெற்றியின் ரகசியம்.
சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நடைபெற்று வரும் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாநிலை போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இன்று வரை தமிழக மக்கள் அனைவருக்கும் இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சினை தெளிவாக புரிந்துள்ளது.
இன்று வரை தமிழக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்று வரை தமிழக அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இன்று வரை அரசு உயர் அலுவலர்கள் பலர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
இன்று வரை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இன்று வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த மாபெரும் வெற்றிக்கான காரணங்கள்
நியாயமான மற்றும் வலுவான கோரிக்கை
ஒருங்கிணைப்பு
குடும்ப உறுப்பினர்களையும் பங்கு பெற வைத்தல்
உண்ணாவிரதம் போன்ற சரியான அகிம்சை முறை
விடுமுறை தினங்களில் போராட்டம்
மனம் தளராமை
விடா முயற்சி
கோரிக்கை மற்றும் போராட்ட நிகழ்ச்சி நிகழ்வு களை பொது வெளியில் கொண்டு வந்து பேசு பொருளாக்கல்.
எல்லாவற்றுக்கும் மேலாக நம்மால் முடியும் என்ற நம்பிக்கை ஆகிய காரணங்களால் தான் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற இருக்கிறது.
மக்கள் ஆசிரியர்கள் பற்றியும் நன்றாக அறிந்து வைத்துள்ளனர், தாங்கள் ஏதாவது ஒரு ஊரில் சென்று சர்வே செய்து பார்க்கவும் பதிவிடவும்.
ReplyDelete