Inaiya Sevaigal: அரசு பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப ஆணை! விண்ணப்பிப்பது எப்படி?

அரசு பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப ஆணை! விண்ணப்பிப்பது எப்படி?


தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் மொத்த பணியிடங்கள் 366

பட்டதாரி ஆசிரியர் மொத்த பணியிடங்கள் 80

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 19

தொகுப்பூதியம்

இடைநிலை ஆசிரியர்  ரூ. 7500

பட்டதாரி ஆசிரியர்  ரூ. 10000

முதுகலைப் பட்டதாரி ரூ. 12000

இவர்களை பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பிக்கொள்ளலாம்.

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை உண்டு.

அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒரு வெள்ளைத் தாளில் அனுப்புதல் பெறுதல் முறையில் தாங்கள் பணிபுரிய விருப்பம் உள்ள பள்ளியின் பெயரைத் தெரிவித்து விண்ணப்பம் தயார் செய்து 20.01.2023 க்குள் கொடுக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலவலகத்தை தொடர்பு கொள்ளவும். 

No comments:

Post a Comment